Sunday, November 25, 2007

நோய் !!

பேரூரின்

மருத்துவ மனையில்

புறநோயாளியாய்

உட்புகுந்தேன்!

நுழைவுச் சீட்டு வாங்க

முதலில் தட்சணையாம்!

பரிசோதிக்கும் மருத்துவருக்குத்

தனியாய் ஒரு கட்டணமாம்!

நுண்கதிர்,இரத்தம்,

இது போல்

இதரச் சோதனைகட்கும்

அன்பளிப்பு தனித்தனியாய்....

ஊசிக்கும் மருந்துக்கும் கூட

ஏற்றாற் போல் விலைகளய்யா!

அரசின் மருத்துவமனையாம்

இலவசமாய்

சிகிச்சை இ(எ)ங்கே....?

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

ஏப்ரல் 19 2007

No comments: