Wednesday, November 28, 2007

முடியவில்லை...!!

ஆறு ஏரி

கிணறு குள

கடின நீரை

மென்னீராக்கலாம்

குடிக்கலாம்

பயன்படுத்தலாம்!


உப்பு கரிக்கும்

கடல் நீரை

குடி நீராக

மாற்றிடலாம்

குடிக்கலாம்

பயன்படுத்தலாம்!


சாக்கடையில்

ஓடும்

கழிவு நீரை

சுத்திகரிக்கலாம்

நாற்றம் நீக்கலாம்

பயன்படுத்தலாம்!


அரசியல் சாக்கடையில்

மூழ்கியோரை ஏனோ?

சுத்திகரிக்கவும்

முடியவில்லை!

நல்வழி படுத்தவும்

இயலவில்லை!!

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

செப்டெம்பர் 06 2007.

No comments: