Sunday, October 28, 2007

இரத்த பாசம்!

வசந்த கால மாலை
சாய்வு நாற்காலியில்-நான்
தென்றலின் தழுவலில்
மெய்மறந்த நிலையில்!

எங்கிருந்தோ
பறந்து வந்த கொசு
உரிமையோடு
என்மீது அமர்ந்து
உரிந்துக் குடித்தது
என் குருதி!

கடித்த இடத்தில்
அரிப்பு எரிச்சல்!
கௌவிப் பிடித்தேன்
கொசு என்கையில்!

கொல்ல நினைத்து
கசக்கும் வேளையில்
உள்மனம் சொன்னது
'பாவம் விட்டு விடு
அதன் உடலில்
உன் ரத்தம்' !

-இமாம்.கவுஸ் மொய்தீன்.