Monday, November 26, 2007

தனிக் குடித்தனம் !!

பொருள்

சேர்க்கும் நோக்கில்

பந்த பாசங்களைத்

தொலைத்து விட்டு

நிம்மதி இன்றி

அலைந்து கொண்டிருப்பவர்கள்!


கூட்டுக் குடும்பம்

பிரச்சினை யென

ஓடி ஒளிந்து

இன்று தாமே

பிரச்சினையாகி விட்டவர்கள்!


இன்றைய இளைஞர்களிடம்

நிலவும்

ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு

தம்மை அறியாமலேயே

காரணமாகி விட்டவர்கள்!


சொத்துக்கள் செல்வங்களை

சொந்தமாக்கிக் கொண்டு

பந்த பாசங்களிடமிருந்து

வெகுதூரம்

சென்று விட்டவர்கள்!



பாவம் இவர்கள்!

அன்னை தந்தையையும்

உடன் பிறப்புகளையும்

ஒதுக்கி விட்டு

ஆன்மீகத்தில்

அமைதியைத் தேடிடும்

பரிதாபத்துக்குரியவர்கள் !!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

1-7-2007.

No comments: