Sunday, November 25, 2007

நிலை கொண்டுவிட்டது!

நிலை கொண்டுவிட்டது!
-------------------------------
எக் காலத்தில்

எச் சூழ்நிலையில்

எப் புண்ணியவானால்

எந் நோக்கத்தில்

வரையப்பட்டதோ?

இவ்வளவு

முன்னேற்றம்

கண்ட பின்னும்

நம்நாடு

இது நாள்வரையிலும்

தொலையவுமில்லை!

அழியவுமில்லை!

பூமத்திய ரேகை போல்

இதுவும்

நிலை கொண்டுவிட்டிருக்கிறது

'வருமைக் கோடு'!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

வார்ப்பில் வெளியானது.

No comments: