எவனோ படைத்திட்ட
நிலத்துக் கிங்கே
சொந்தங்கள் பந்தங்கள்!
விலை நிர்ணயங்கள்!
விற்பனைகள்... வரிகள்!
சொத்துக்களைச்
சொந்தமாக்கிக் கொள்ள
வாதங்கள்.... வழக்குகள்!
சொந்தங்களைப் பகுத்துக்காட்ட
வரப்புகள் வரைகோடுகளென
எல்லைகளாம்.... ஏளனங்கள்!
வரப்புகளில்
நீரைப் பாய்ச்ச
வெட்டுக்குத்துக்கள் விபரீதங்கள்!
சொத்துக்களுக்காக
நீதிமன்றம் சென்று
சொந்தங்களை
இழந்து நிற்கும்
அவலங்கள்.... பரிதாபங்கள்!
மண்ணுக்காக
சம்பவிக்கும் மரணங்கள்...
மண்ணுக்கே இரையாகிவிடும்
மனிதப் பிணங்கள்!
இத்தனைக்குப் பின்னுமிங்கே
இனிதே தழைத்தோங்கும்
மண்ணாசை!
- இமாம். கவுஸ் மொய்தீன்.
முத்துக்கமலத்தில்.
15-2-2007.
Monday, November 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment