எப்போதோ
அழிந்து விட்ட
அரக்கனுக்காக
வெடி வெடித்து
உற்சாகம்
உவகையுடன்
இன்னும்
எத்தனை ஆண்டுகள் தான்
விழா எடுப்பது?
இன்றும்
நம்மோடு
வாழ்ந்து
கொண்டிருக்கும்
அரக்கர்களை
எப்போது தான்
அடையாளம்
காண்பது?
வறுமை
இலஞ்சம் ஊழல்
அராஜகம்
மோசடி
மதவெறி
தீவிர வாதம்
அணுவாயுதம் என
எத்தனை யெத்தனை
அரக்கர்கள்
இன்றைக்கும்
நம் சமுதாயத்தில்...
இவர்களை
அழித்து விட்டுக்
கொண்டாடப் போகும்
தீபாவளித் திருநாள் தான்
என்னாளோ..?
அவ்வினிய நாளைச்
சந்திப்போமா?
இவ் வினிய
திருநாளில்
சிந்திப்போமா?
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
பதிவுகள்.
நவம்பர் 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment