முகத்தில் மீசை!
ஆடவரின் அழகு
வீரத்தின் அடையாளம்
நாகரிகம் என
தொன்று தொட்டு
வரும் பழக்கம்
வழக்கம்!
அரும்பு மீசை
முறுக்கு மீசை
கத்திரி மீசை
சுருள் மீசை
எறால் மீசை என
எத்தனையெத்தனையோ
மீசைகள் இலக்கியத்தில்
வரலாற்றில்
நடைமுறையில்..
இக்கால
ஆடவருக்கோ
முழுக்க
மழித்த முகமே
அழகு
ஆசை
கவர்ச்சி
நாகரிகமாம்!
அதனால் தானோ
என்னவோ?
கரப்பானை
அஞ்சும் அளவு
கணவனை
அஞ்சுவதில்லை
இக்கால மகளிர் !
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.
தமிழோவியம்.
மே 31 2007
Sunday, November 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment