Tuesday, September 30, 2008

நாளை எவரோ?

சவ ஊர்வலம்!
கூத்தும் மேளமும்
முழங்கியபடி
முன்னே செல்லும் சிலர்...

காசுக்காகவோ
கடமைக்காகவோ
பிணத்தைச் சும‌ந்தபடி
பின் செல்லும் சிலர்...

சோகத்தில் துயரத்தில்
தோய்ந்த முகத்துடனும்
பிரிவின் வேதனையுடனும்
பின் தொடரும் சிலர்...

வீதியோரத்தில்
நின்று கொண்டு
வேடிக்கை
பார்த்தபடி சிலர்...

பிணம் மட்டும்
அமைதியாய் உரைக்காமல்
உணர்த்திக் கொண்டிருந்தது
''இன்று நான்
நாளை எவரோ?

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

Last update : 11-09-2008 01:26

நன்றி: அதிகாலை.

No comments: