
தெரிந்த கேள்வி
தெரியாத விடை
இறைவன்!
மேடையில் சாதியொழிப்பு
வீட்டுக் கூடத்தில்
சாதிக்கூட்டம்!
சுட்டப் பழமா? சுடாத பழமா?
சுடும் பழம் தான்!
விலைவாசி!
இருளில் கலவரம்
பகலில் சமாதானப் புறா!
அரசியல்வாதி.
சாலையோரக் கடவுள்
சம்பாதித்துக் கொடுக்கிறது
சில்லறைக்காசு!
ஐந்தறிவை ஏமாற்றும்
ஆறறிவு
வைக்கோல் கன்று !
முகவர்கள் மோசடி
வேலை தேடி அலைகிறது
வெளிநாட்டு மோகம் !
முள்ளும் புதரும்
பஞ்சுமெத்தை தான்
கௌதாரிக் கூடு !
கட்டியது மாளிகை
கண்டது குடிசை
கட்டிடத் தொழிலாளி !
-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.
செப் 18 2008 .
நன்றி: தமிழோவியம்.
No comments:
Post a Comment