Tuesday, September 30, 2008
கனிம நீர்!
குடிக்க குளிக்க
சமைக்க சலவைக்காக
கழுவ சுத்தமாயிருக்க
இறைவன் அளித்த கொடை
நீர்!
ஆறாய் வரும் வழியில்
கழிவுகளையும் இரசாயனங்களையும்
கலக்கச் செய்கின்றார்
மனிதர்களில்
ஓர் சாரார்!
விவசாயத்துக்கும்
மனிதத் தேவைகட்காகவும்
பயன்படுத்திக்
கொள்கின்றார்
ஓர் சாரார்!
புட்டியில் அடைத்து
'கனிம நீர்'
எனும் பெயரில்
காசுக்கு விற்கின்றார்
ஓர் சாரார்!
அதில் அடைந்து கிடக்கும்
நுண்கிருமிகள் எத்தனை?
அறியாமலேயே வாங்கி
பருகிக் கொண்டிருக்கின்றார்
ஓர் சாரார்!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
Last update : 23-09-2008 22:49
நன்றி: அதிகாலை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment