Tuesday, September 30, 2008
இமாம் குறுங்கவிதைகள்!!
சாதிமதப் பிரிவுகள்
சரியான புத்திமதி
பூகம்பம்!
எவரின் கண் பட்டதோ
உடைந்து சிதறியது
திருஷ்டிப் பூசனி!
பன்றிகள் உலவும் வீதி!
பறையருக்குத் தடை!
மனுதர்மம்.
காவிரியிலா நீரில்லை?
கரை புரள்கிறது
கானல் நீர்.
இன்று இவர்!
நாளை எவரோ?
மந்திரி வாழ்வு!
கொள்ளை போனாலும்
தளர்வதில்லை
தேனீக்கள்!
ஆடை கட்டிய ஆபாசம்
நிர்வாணக் கடைவிரிப்பு
மஞ்சள் பத்திரிகை.
பழகியதில் புரிந்தது
மனித வடிவில்
பச்சோந்தி!
இன்றும் தெரியாத விடை
முதலில் போட்டது யார்?
ஒற்றையடிப்பாதை!
-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.
16-9-2008.
நன்றி: முத்துக்கமலம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment