
நாள்தோறும் விடிந்தும்
விடியாமலேயே இருக்கின்றது
காலைப் பொழுது!
ஊடகங்களைத் திறக்க
பதைபதைக்கிறது
மனம்!
'சைக்கோ'வின் அடுத்த பலி
உறக்கத்திலிருக்கும்
அப்பாவி எவருமா?
'சைக்கோ' என நினைத்ததால்
கொல்லப்பட்டிருக்கும்
அப்பாவி எவருமா?
'சைக்கோ'வின் பெயரால்
கைதாகி இருக்கும்
அப்பாவி எவருமா?
கைதானவரும் கொல்லப்பட்டவரும்
'சைக்கோ'வாய் இருக்கும் பட்சத்தில்
தொடரும் கொடூரக் கொலைகளுக்குக்
காரணம் யார்? யார்? யார்?
பொதுமக்களுக்கு வேண்டுமாயின்
புதிராய் பீதியாய் இருக்கலாம்
'சைக்கோ'!
ஸ்காட்லாண்ட் யார்டுக்கு
இணையானதாகக் கருதப்படும்
தமிழகக் காவல்துறைக்குமா...?
தமிழோவியத்தில் - இமாம் கவுஸ் மொய்தீன்.
ஜூலை 31 2008